உலகின் 4ஆவது பெரிய பங்குச்சந்தையாக உயர்ந்த இந்தியா..!

0
224

.

இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மேலும், சர்வதேச முதலீட்டாளர்களின் உலகளாவிய சந்தையாகவும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. ஆசியாவிலேயே இந்தியா தான் சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் பொருளாதார நாடாக விளங்குகிறது.

அந்த வகையில் தற்போது, இந்தியா தெற்காசிய நாடுகளின் பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் மூலம் உலகின் 4ஆவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கூட்டு மதிப்பு நேற்றைய நாள் முடிவில் 4.33 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஹாங்காங் சந்தைகளின் கூட்டு மதிப்பு 4.29 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இதன் மூலம் இந்தியா உலக அளவில் 4ஆவது பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த மாதம் 5ஆம் தேதி முதல் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது. இதில் பாதியளவு கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here