Isha Sathguru: ஈஷா யோகா மைய சத்குரு கடந்த மார்ச் 17ஆம் தேதி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டாட். சில நாட்களாக அங்கு ஓய்வில் இருந்த அவர் இன்று (ஏப்ரல் 11) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.
அப்போது. சத்குருவை வரவேற்கும் விதமாக, பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலில் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.
மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் போல காட்சியளிக்கப்பட்டது. ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.