ஜாபர் சாதிக் விவகாரம்.. 12 மணி நேரம் விசாரணை.. அமீரின் விளக்கம் என்ன?

0
519

‘Ameer’: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள் வைத்திருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருள்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் என தெரியவந்தது. தொடர்ந்து தலைமைறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு பிறகு இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ் திரைப்பிரபலங்களின் பெயர் வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, இதில் பாலிவுட் திரைப்பிரபலங்களும் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி அமீர் டெல்லி சென்றார். அங்கு அவரிடம் அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்,

அப்போது, “ஜாபர் சாதிக் செய்யும் கடத்தல் தொழில் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அவருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றை தொடங்கினேன். நான் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்திற்கு அவர் தான் தயாரிப்பு செய்கிறார்.

அது தொடர்பாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தேன் அவ்வளவு தான்’ என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “அமீரை கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்படவில்லை.

விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். முக்கிய சாட்சியாக அவர் விசாரிக்கப்படுகிறார். ஜாபர் சாதிக்கை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். அப்போதும், அமீர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

அந்த விசாரணையில் இருவரையும் நேருக்கு நேர் அமர வைத்து விசாரிக்க இருக்கிறோம்” என்றனர். இதனைத் தொடர்ந்து அமீர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் இந்த விசாரணை குறித்த தகவல்களை கேட்டறிய அனைத்து ஊடக செய்தியாரும் அமீருக்கு தொடர்புகொண்டுள்ளனர். ஆனாம், இதற்கு அவர், ‘இன்னும் மூன்று நாட்களில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பேசுகிறேன். அதுவரை என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here