Amitabh Bachchan: அமித்தாப் பச்சன் உடல்நலம் குறைவு காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்ய உள்ளது.
மேலும், காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அமித்தாப் பச்சன் நேற்று நடந்த பெண்கள் கிரிக்கெட் போட்டியைக் காண வந்தார். அங்கு, அமித்தாப் பச்சனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அவரிடம் நலம் விசாரித்தனர்.
அப்போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என கேட்டார். அதற்கு அமித்தாப் பச்சன், ‘நான் நலமாக இருக்கிறேன். நேற்று பரவியது வதந்தி’ என கூறினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் மூலம், அமித்தாப் பச்சன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியானது.