தொழிலதிபரை மணம் முடித்த மீரா சோப்ரா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

0
124

Meera Chopra: தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா சோப்ரா. தொடர்ந்து தமிழில் ‘ஜாம்பவான்’, ‘லீ’, ‘மருதமலை’, ‘ஜெகன் மோகினி’, ‘இசை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். மீரா சோப்ராவுக்கு 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதை வெளியில் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருந்த நிலையில், தனது காதலனான தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்துள்ளார்.

மீரா சோப்ராவின் திருமணம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here