ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின்..!

0
95

ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் தனது யாத்திரையை கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரையானது தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது மராட்டியத்தில் 4ஆவது நாளாக நடந்தது.

பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி ராகுல்காந்தி, பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். மேலும், ஆங்காங்கே இருந்த பொதுமக்களிடமும் அவர் பேசினார். இந்த யாத்திரை இன்று (மார்ச்.16) தானே மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து அவர் நாளை (மார்ச்.16) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் இந்த யாத்திரையை நிறைவு செய்ய இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, நாளை மாலை மும்பை சிவாஜி பார்க்கில் INDIA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றுப் பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நாளை (மார்ச்.16) காலை விமானம் மூலம் மும்பை செல்லவுள்ளார்.

அங்கு, ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்த கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ஜனவரி 14ஆம் தேதி தொடங்கிய யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here