தமிழ் சினிமாவில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் கோகுல். இவர் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரொடக்ஷன் நம்பர் எண் 10’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவுள்ளது.
மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்ஷன் படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அப்டேட்டுகள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூரி நடிக்கும் ‘கருடன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!