தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகும் சீரியல்களில் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும், இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
தொடர்ந்து, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். சமீபத்தில் ரேஷ்மா தனது உதட்டை பெரியதாக்குதற்கான சிகிச்சை செய்துள்ளார். இதனை வெளிப்படையகாவே அவர் பல நிகழ்ச்சியிகள் கூறியிருக்கிறார்.
இருந்தபோதிலும் அவரது சிகிச்சை குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கடுப்பான நடிகை ரேஷ்மா அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர், “இது என் உதடு என் இஷ்டம். என உதடு இப்படி இருப்பது எனக்கு பிடித்துள்ளது. இதற்காக யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை’ என கூறியுள்ளார். ரேஷ்மாவின் இந்த பதிலுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.