நல்ல சினிமாவைப் பார்க்கும் ரசிகர்கள்.. கில்லி ரீரிலீஸ் குறித்து பேசிய இயக்குநர் ஹரி..

0
94

‘Director Hari’ : இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்னம்’. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இது விஷாலின் 34ஆவது படமாகும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதுகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

‘ரத்னம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘Don’t Worry Da Machi’ பாடல் மார்ச்.09 வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அவரே பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த பாடலுக்கு விவேகா வரிகள் எழுதியிருக்கிறார். தொடர்து ‘ரத்னம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘எதனால’ என்ற பாடல் மார்ச் 29ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ‘ரத்னம்’ படத்தின் புரோமோஷன் காட்சி வெளியிடப்பட்டது. இதில் இயக்குநர் ஹரி கலந்து கொண்டு தியேட்டருக்கு வந்த பொதுமக்களுடன் புரோமோஷனைப் பார்த்து ரசிகர்களிடம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் நடித்த ‘கில்லி’ படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலிஸாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கில்லி’ படத்திற்கு கூடிய கூட்டம் சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here