மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப் பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி தருமாறு தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.தற்போது நடைமுறையில் உள்ளகுறைந்தபட்ச மிகைப்பணி ஊதியத்தை ஓட்டுநர்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆகவும், நடத்துநர்களுக்கு ரூ.590-ல்இருந்து ரூ.790 ஆகவும் உயர்த்தி வழங்க அனுமதிக்கப்படுகிறது.