‘மக்கள் நீதி மய்யம் நிர்வாக குழு கூட்டம்’ – உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு..!

0
94

மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறும் நிலையில் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here