உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்!

0
239

சென்னையில் இன்று (ஜன.07) உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது, புதிதாக தொழில் தொடங்குவது, தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது போன்ற முயற்சியிலுள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களால் 100க்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (ஜன.08) நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 58 பொருள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ‘கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் அதை நான் ரசிக்க வேண்டும்’ – விஜய் பேசிய பழைய வீடியோ வைரல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here