‘திமுக-வை ஆதரிக்கும் மனநிலை மக்களுக்கு இல்லை’ – பிரதமர் மோடி பேச்சு..!

0
147

PM Modi: பிரதமர் மோடி கடந்த மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு வந்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதன்படி நேற்று (மார்ச்18) கோயம்புத்தூர் வந்தார்.

அங்கு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் பேசியதாவது, “கோயம்புத்தூரில் 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது.

இப்போது, இந்த ஊருக்கு வந்த உடன், குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போகிறது.

நமது பாரதிய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் பெரும் வலுவான கட்சியாக உருவாகி வருகிறது. இனி திமுக-வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் யாரும் இல்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here