‘புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்’ – செல்வராகவன்..!

0
136

Selvaraghavan: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன்.  7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய செல்வராகவன் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் தற்போது தனது 50ஆவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு தனுஷின் சகோதரர் செல்வராகவன் திரைக்கதை எழுத உதவியதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது செல்வராகவன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ படத்திற்கு நான் கதை எழுதியதாக தகவல் பரவி வருகிறது.

ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் ‘ராயன்’ படத்தில் நான் எதுவுமே செய்யவில்லை, இது தனுஷின் கனவு கதையாகும். இந்த கதை முழுக்க முழுக்க தனுஷால் உருவாக்கப்பட்டது. நான் இந்த படத்தில் ஒரு நடிகர் மட்டும் தான்” என குறிப்பிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள்!

புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்! இந்த நொடிதான் பிறந்ததுபோல் நினைத்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here