தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், 109 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
வடதமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும்.
மே 2, மே 3ஆகிய தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.
இதனால், அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை (102.2 முதல் 109.4 டிகிரி வரை) பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.