‘Sivakarthikeyan’ : தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘SK 23’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையம்சமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘SK 23’ படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வித்யூத் ஜம்வால் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது ‘SK 23’ படத்தின் புதிய லுக்கில் சிவகார்த்திகேயன் கையில் மைக்குடன் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.