‘விக்ரம் என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்’ – ‘வீர தீர சூரன்’  இயக்குநர்..

0
72

‘Chiyaan 62’: சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சியான் 62’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த நிலையில் மீண்டும் இவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இந்த ‘சியான் 62’ படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒரு வில்லன் தான் எஸ்.ஜே.சூர்யா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கண்ட ரசிகர்கள், ‘படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் கொடுத்தது போதும் எப்போது படத்தின் ஷூட்டிங் நடைபெறும். வேறு புதிய அப்டேட்டுகள் கொடுங்கள்’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதனையறிந்த படக்குழு தற்போது ஒரு புதிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, ‘சியான் 62’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘சியான் 62’ படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்தது. இந்த நிலையில், சியான் விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17 படத்தின் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து இயக்குநர் அருண்குமார் பேசுகையில், “இது ஒரு ஆக்‌ஷன் கலந்த படம்.  தற்போது படத்தின், முன் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இருக்கிறோம்.

இன்னும் சில நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்புக்காக மதுரைக்குச் செல்ல இருக்கிறோம். எல்லோருக்கும் தெரியும் விக்ரம் அர்ப்பணிப்போடு நடிப்பவர், அவர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாத்த வேண்டும்.  அவருக்கு மட்டும் இல்லை என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here