TNPSC: குரூப்-1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு..

0
155

TNPSC: தமிழ்நாடு அரசு வேலைகளில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகைகளில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் துணை ஆட்சியர், காவல் துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here