தமிழகத்தில் 2 நாட்கள் வறண்ட வானிலை நிலவும்.. வானிலை ஆய்வு மையம்..

0
211

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், ” குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜனவரி 16 மற்றும் ஜனவரி 17ஆகிய தேதிகளில் தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரை; தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், ஜனவரி 21 மற்றும் 22ஆகிய தேதிகள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்” என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here