KamalHaasan: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் இன்று (ஏப்ரல் 3) பிரச்சாரத்தில் ஈடுபாட்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் குரலாக, உங்கள் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார். ஒட்டுமொத்த இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார். குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை தம்பி திருமாவளவன் இருக்கிறார்” என்றார்.