கிராமி விருது பெற்ற இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழு..!

0
135

அமெரிக்காவில் இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கிராமி விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இசைத்துறையின் மிக உயரிய கிராம விருது இந்தியாவைச் சேர்ந்த சக்தி ஆல்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இசைக்குழுவில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மேலும், இந்த சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. இந்த நிலையில், சக்தி ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here