TNGIM2024: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் (ஜன.07) நாளையும் (ஜன.08) நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற டாடா நிறுவனம், 12ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, 177 கோடி ரூபாயில் குவால்காம் நிறுவன வடிவமைப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, கோத்ரேஜ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையம் ரூ.515 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், செங்கல்பட்டில் அமையவுள்ள கோத்ரேஜ் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் 16ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் 10ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவுள்ளது.

இதையும் படிங்க: ‘தொழில் தொடங்க தமிழ்நாடு சிறந்த மாநிலம்’ – ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here